யாழ். நகர் பகுதியில் 300 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது

84 0

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை  பொலிஸார் கைது செய்தனர்.

யாழ்.நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது 300 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதோடு, சந்தேகநபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர்.