யாழ். மாநகரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

192 0

யாழ். மாநகரில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற, குருநகர் ஐந்துமாடி பகுதியைச் சேர்ந்த  46 வயதுடைய ஒருவர், மானிப்பாய் வீதி சத்திரச்சந்திக்கு அண்மையில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.