12 இந்திய மீனவர்கள் விடுதலை

156 0

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினரால் கைதான 12 இந்திய மீனவர்கள் இன்று 08 ஆம்திகதி புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணம், பருதித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழகத்தின் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களே 08 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மீனவர்களின் படகை அரசுடமையாக்குமாறு பருத்திதுறை நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.