ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

152 0

ஆர்ப்பாட்டம் நடாத்தலாம் – பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு ; சட்டத்தை மீறினால் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை எனவும் எச்சரிக்கை

அரசியலமைப்பூடாக உறுதி செய்யப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமைகளை பொலிசார் மதிப்பதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று விஷேட செய்தி ஒன்றினை வெளியிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார். எனினும், சட்டத்தை மீறி வன்முறையுடன், அரச தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வண்ணம் செயற்பட்டால் பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் இதன்போது எச்சரித்தார்.