நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற மேலும் 7 பேர் கைது

111 0

கடந்த சில தினங்களாக நாட்டிலிருந்து சட்டவிரோதரமாக படகு மூலம் வெளிநாடு செல்வோரின்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், நேற்று மாலை படகில் சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற மேலும் ஏழு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மற்றும் பேசாலை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை கடற்படையினர் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.