கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

109 0
  • கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (08) காலை வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

    குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

    கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு 01 பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, நாளை காலை 6.00 மணிக்குள் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர முடியும் என சபை தெரிவித்துள்ளது.