யாழ்.கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை திருடிய கும்பல், துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் 05 ஆம் திகதி இரவு இடம்பெற்ற நிலையில் காலை வீட்டிலுள்ளவர்கள் துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலும் திருடப்பட்டமை அம்பலமாகியுள்ளது