மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படும்

195 0

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீன்பிடி கப்பல்களுக்கு டீசல், எரிவாயு மற்றும் ஐஸ் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் துறையினர் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி இன்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.