எரிபொருள் நிலையத்திற்கு அருகே கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிலையத்திற்கு அருகில் நேற்று (05) இரவு பரபரப்பு ஏற்பட்டது.
அதன்படி, பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தி 13 பேர் கைது செய்யப்பட்டனர்.