எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை இனி இல்லை – காஞ்சன விஜேசேகர

159 0

எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது டைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளைக் குறைக்க ஆரம்பத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் வரிசையில் நிற்பதில் இருந்து விடுவிப்பதற்காகவும், ஜூலை 11 அல்லது 15 ஆம் திகதிகளில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்குத் தெரிவிக்கவும் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சில நாட்களுக்கு மட்டுமே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது, .

எனினும் அதன் பின்னர் அது நடைமுறைப்படுத்தப்படாமல் தற்போது வியாபாரமாக மாறியுள்ளது.  தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கும் முறையானது எரிசக்தி அமைச்சின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டோக்கன் முறை தொடர்வதை அமைச்சர் நிராகரித்த போதிலும், பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் பெற வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகினறமை குறிப்பிடத்தக்கது.