மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

125 0
இன்று மற்றும் நாளை 3 மணித்தியால மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.

கொழும்பு நகர் பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின் துண்டிப்பு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.