இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
கொழும்பு நகர் பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின் துண்டிப்பு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.