பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் டீசல்

366 0

யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்து, அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீசலை பதுக்கி விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டனர்.

இதன்போது 291 லீற்றர் டீசல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய கடை உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.