வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் ஆற்றில் மட்டி எடுத்துக் கொண்டிருந்த 60 வயதுடைய பெண்ணொருவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆற்றில் இவர் மட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டி எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட வசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்த பெண் கிண்ணையடி சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.