டொலர் செலுத்தி எரிபொருளை பெறும் நிறுவனங்களுக்கு காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள அறிவிப்பு

121 0

அமெரிக்க டொலரில் பணம் செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் அல்லது தொழிற்துறையும் வாராந்த உத்தரவாத எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நுகர்வோர் கணக்கை ஆரம்பிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும்  தெரிவிக்கையில்,

அவர்கள் ஒரு மாதத்திற்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்றும் 12 ஆம் திகதி முதல் தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் வழங்கப்படும். ஏற்கனவே பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் 12 ஆம் தேதி முதல் தங்கள் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.