கிளிநொச்சியில் பதுக்கிவைத்திருந்த 31 பரல் எரிபொருள் மீட்பு – ஒருவர் கைது

121 0

கிளிநொச்சி நகருக்கு அன்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஆகியவை உள்ளடங்கிய 31 பரல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நகருக்குள் சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்தமை  தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல்களின் அடிப்படையில் இன்று (03-07-2022 )திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் உள்ளடங்களாக 31 பரல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வருவதையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.