கட்டுத்துப்பாக்கியினால் மானை வேட்டையாடியவர் புத்தளத்தில் கைது

89 0

புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் மானொன்றை வேட்டையாடி இறைச்சிக்காக விற்பனை செய்த குற்றத்திற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் 2 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

கட்டுத்துப்பாகியினால் மானை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணக்களத்தினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மான் இறைச்சி விற்பனை இடம்பெற்று வருவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மானின் கொம்பு மற்றும் மானின் தோல் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி மாரசிங்ஹ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மானின் உடற்பாகங்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்.