இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

94 0

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் கையிருப்பு நிறைவடைந்துள்ளதால் விநியோகம் நேற்று முன்தினம் (01) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசர தேவைக்காக மிகவும் குறைந்த அளவான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக முழுமையான எரிபொருளுடன் இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டு விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தேவையான விமான எரிபொருளை பெற்று தருவதற்கு கனியவள கூட்டுதாபனம் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் உறுதியளித்துள்ளது.

எனினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கான விமான சேவைகளை குறைப்பதற்கு சில விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.