கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் டிசல் பதுக்கி வைத்திருந்தவர் கைது

136 0

கிளிநாச்சி நகரப் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டதுடன் இதனை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கரடி போக்கு சந்திக்கு அன்மித்த பகுதியில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் டீசல் 950 லிட்டர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டதுடன் இதனை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாறு சட்ட விரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மன்னனை என்பன மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.