எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 3 வயது பாக்., சிறுவன்- குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

136 0

பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையை தவறுதலாக தாண்டிய மூன்று வயதான பாகிஸ்தான் சிறுவனை எல்லை பாதுகாப்பு படையினர் அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் நேற்று இரவு 7 மணியிளவில் எல்லை வேலிக்கு அருகில் நின்றபடி குழந்தை அழுதுகொண்டிருந்ததை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கவனித்தனர்.

குழந்தை அழுதுக் கோண்டே அப்பா, அப்பா என்று அழைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்பு படை களத் தளபதி பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் உடனடியாக பாகிஸ்தானுடன் கொடி சந்திப்பை நடத்த முன்றார். இதனால் குழந்தையைத் திருப்பி ஒப்படைக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் குழந்தை அவரது தந்தை முன்னிலையில் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.