வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கை

157 0

உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இளைஞர் கழகங்களுக்கிடையிலான வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

திருகோணமலை பீலியடி பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள கத்தரி, வெண்டி, கொச்சி மற்றும் மரவள்ளி போன்ற பயிர்கள் சிறப்பாக காணப்படுகின்றன.

இதற்கான பராமரிப்பு நடவடிக்கைகள் ஆலோசனை வழிகாட்டல்களும், பிரதேச வெளிக்கள விவசாய அதிகாரிகள் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செய்கைகள் கந்தளாய், கிண்ணியா, வெருகல் மற்றும் மூதூர் போன்ற பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.