கிண்ணியா பாலத்திற்கு சூரிய ஒளியிலான மின் விளக்குகள்

122 0

மிக நீண்ட காலமாக மின் விளக்கின்றி இருளில் காணப்பட்ட கிண்ணியா கடல் மேல் பாலத்திற்கான சூரிய ஒளியிலான மின் விளக்குகள் அல் ஹிக்மா நிறுவனத்தின் அனுசரணையுடன் உத்தியோகபூர்வமாக நேற்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.நிவாஸ் தலைமையில் குறித்த மின் விளக்குகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில்  நகர சபை உறுப்பினர்கள் ,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி ,நகர சபையின் செயலாளர் விஷ்னு மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் அல் ஹிக்மா பௌண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் இபாதுல்லா , சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றனர்.