வினோதமான முடிவுகளை எடுப்பதற்கு பதில் அரசாங்கம் பதவி விலகவேண்டும் – அனுரகுமார

123 0

அத்தியாவசி சேவைகளிற்கு மாத்திரம்  எரிபொருட்களை வழங்குவது என்ற அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை முற்றாக குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என ஜேவிபியின் தலைவர்அனுரகுமாரதிசநாயக்க  தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டதை இது மீண்டும் நிரூபித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையும் மாணவர்கள் பாடசாலைகளிற்கு செல்ல முடியாத நிலையும் காணப்படுகின்றது அனைத்து தொழில்துறையும் முடக்கப்பட்டுள்ளது நாடு முடக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வினோதமான முடிவுகளை எடுப்பதற்கு பதில் அரசாங்கம் பதவி விலகவேண்டும் என ஜேவிபியின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.