ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பிதம் அடையும் நிலை: அனுரகுமார

136 0

எரிபொருள் தட்டுப்பாட்டால் ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (25)  இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது