எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோதல் ; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி

116 0

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே குறித்த மோதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோதிலில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான 4 பேர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.