நிமல் சிறிபாலவை சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் : இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

220 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை, அக்கட்சிப் பதவிகளில் இருந்து இடை நிறுத்தவோ, கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பதை தடுக்கவோ கூடாது என அறிவித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுதந்திர கட்சியின் மத்திய குழுவுக்கு இந்த இடைக்காலத் தடை உத்தரவு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகமவினால் கடந்த 7 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், ;திங்கட்கிழமை ( 20) அவ்வுத்தரவு புதன்கிழமை ;22 ஆம் திகதிவரை ; நீடிக்கப்பட்டது.

அமைச்சராக பதவியேற்றதும், நிமல் சிறிபால டி சில்வா கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்த நிலையில், அதற்கு எதிராக அவர் இவ்வாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பொருளாளர் ; லசந்த அழகியவன்ன உள்ளிட்ட நல்வரை பிரதிவாதிகளாக பெயரிட்டு ; அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி ; அவ்வழக்கை ; ஆராய்ந்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம, மனுதாரர் கோரிய பிரகாரம், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் அவர் வகித்த பதவிகளில் இருந்து அவரை நீக்கவோ, இடை நிறுத்தவோ தடை விதித்து இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பித்தார்.

அதன்படி, ; நிமல் சிறிபால டி சில்வாவை மத்திய  செயற் குழுவில் இருந்தும், ; நிறைவேற்றுக் குழுவிலிருந்தும், ; மாவட்ட தலைவர் பதவியிலிருந்தும் ; தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும்  நீக்குவது மற்றும் சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கும் அது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதர்கும் இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பொன்றினைப் பெற்றுக்கொண்டதை மையப்படுத்தி, ; மனுவின் பிரதிவாதிகள் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தன்னை கட்சி பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவித்ததாக மனுதாரரான  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஊடக அறிக்கை வெளியிட்ட பின்னர் மத்திய செயற் குழு கூடியதாகவோ அல்லது அதில் ஏதும் தீர்மனங்கள் எடுக்கப்பட்டதாகவோ தனக்கு தெரியாது என நிமல் சிறிபால டி சில்வா மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ”

அத்துடன், தன்னை கட்சிப் பதவிகளில் இருந்து இடை நிறுத்துவதாக ; ஊடக அறிக்கை வெளியிட முன்னர், தன் பக்க நியாயங்களை கூற தனக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை எனவும் இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால ; டி சில்வா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

;இந் நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம நிமல் சிறிபால டி சில்வாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்க இடைக்கால தடை ; உத்தரவைப் பிறப்பித்தார்.

;அதன்படி அந்த தடை உத்தரவு 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவித்திருந்த  நீதிபதி, அன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பினருக்கு மன்றில் விடயங்களை முன் வைக்குமாறும் உத்தரவிட்டிருந்தார். ;அதன்படி இன்று மன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் சட்டத்தரணிகள் குழாமொன்று ஆஜராகி ; தமது விளக்கங்களை முன் வைத்திருந்தனர்.

தற்போதும் மனுதாரருடன் சமாதானமாக செல்ல, தமது சேவை பெறுநரால் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அக்கலந்துரையாடல் தோல்வியடைந்தால் மட்டும் ; தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைக்க எதிர்ப்பார்ரப்பதாகவும், மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் குறிப்பிட்டனர்.

இந் நிலையிலேயே, வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டு, அதுவரை இடைக்கால தடை நீடிக்கப்பட்டது.