கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வெட்டிக் கொலை

243 0

மொரட்டுவை, கட்டுபெத்த, மோல்பே வீதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இனந்தெரியாத இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் கைகள் முன்னால் கட்டப்பட்டிருந்ததாகவும் மார்பு மற்றும் இடுப்பில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) இரவு பிரதேசவாசி ஒருவர் செய்த தொலைபேசி அழைப்பை அடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.