நாளையும் நாளை மறுதினமும் இரண்டரை மணித்தியால மின்வெட்டு !

157 0

நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தா தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு குறைவான மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.