முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை – இராணுவம் துப்பாக்கி சூடு !

242 0

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் குழப்ப நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இராணுவம் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளதோடு பொதுமக்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் குழப்பமான நிலை தற்போது தோன்றியுள்ளது .

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பகரமான சூழல் ஏற்பட்ட நிலையில் எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர்கள் சிலர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.