கொரோனா அறிகுறி இருந்தால் மாநகராட்சிக்கு விவரம் அளிக்க வேண்டும்- ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு

117 0

சென்னையில் கொரோனா அறிகுறி உள்ள நபர்களின் விவரங்களை தனியார் மருத்துவமனைகள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரேனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் மாநகராட்சிக்கு வருவதில்லை என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளோர் விவரங்களும் மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.