களனி கங்கையில் வீசப்பட்ட குழந்தையின் சடலம் கரையொதுங்கியது?

153 0

வென்னப்புவ வைக்கால் கடற்கரையில் நேற்று (17) மாலை குழந்தை ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 4 அடி உயரம் கொண்ட 5 வயது சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் சிவப்பு நிற டி-சர்ட், பெட்டி போட்ட அரை காற்சட்டை மற்றும் ஒரு ஜோடி பாதணிகளை அணிந்திருந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் கடந்த 15ஆம் திகதி மாலை வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் பெண்ணொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட குழந்தையா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.