அதானி குழுமத்துடனான உடன்படிக்கைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

127 0

இந்தியாவின் அதானி குழுமத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதிரான உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது.

பம்பலப்பிட்டி மெஜஸ்டிக்சிட்டியின் முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டியை நோக்கி நகர்ந்தவண்ணமுள்ளது.

இந்தியாவின் அதானி குழுமத்துடான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தை கைவிடக்கோரி சுமார் 75 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் கொள்ளுப்பிட்டியை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர் என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.