ஆளுநர் மாளிகை முன்பு தமிழக காங்கிரஸ் இன்று போராட்டம்

133 0

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: டெல்லி காங்கிரஸ் அலுவலகத்துக்குள் போலீசார் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி நிர்வாகிகள், தொண்டர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது.

இந்திய ஜனநாயகத்தில் இது ஒரு துக்க நாள். டெல்லி போலீசாரின் இந்த அராஜக செயலை கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகை முன்பு இன்று (16-ந் தேதி) காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

17-ந் தேதி (நாளை) மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்துடன் எங்களது எதிர்ப்பு நின்று விடாது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.