மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது

171 0

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் பெற்றோல் வழங்குமாறு கோரி நேற்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து பொலிஸார் வெளியேற்றியதுடன், அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெற்றோலிய கூட்டுத் தாபனத்துக்கு முன்னால் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 03.00 மணி தொடக்கம் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தான் எரிபொருளுக்கு பணம் செலுத்தி நான்கு நாட்கள் தனக்கு எரிபொருளை வழங்காது, நகரிலுள்ள அடுத்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை எடுத்துச் செல்ல உள்ளதாக வரிசையில் காத்திருந்தவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் உள்ள  பொற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் காலை 09.00 மணி தொடக்கம் எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் ஒன்று கூடி அங்கிருந்து எரிபொருளை எடுத்துச் செல்ல விடாததையடுத்து அங்கு பொலிஸார் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்பாட்டகாரரிடம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் இதுவரை எரிபொருளுக்காக பொற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பணம் செலுத்தவில்லை என தெரிவித்தனர்

இதனை ஏற்றுக் கொள்ளாது ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து செல்லுமாறு பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்ததனர்.

இருந்தும் அங்கிருந்து ஆர்ப்பாட்டகாரர்கள் வெளியாயேறாத நிலையில் பொலிஸார் அவர்களை அடித்து துரத்தியதுடன் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்தததையடுத்து, அங்கு நிலமை கட்டுப்பாட்டிற்கு வந்ததையடுத்து பொற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருட்களை ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.