திருகோணமலை சிறைச்சாலையில் ஏழு கைதிகள் விடுதலை

206 0

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, 173 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து ஏழு கைதிகள் விடுதலை பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில், மூன்று கைதிகளுக்கு வேறு வழக்குகள் உள்ளதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நான்கு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதில் இரண்டு பெண்களும் அடங்குவர்.

சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.