சிறையில் இருந்து 7 கைதிகள் விடுதலை

163 0

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்று 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஏழு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் .

சிறுகுற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே இவ்வாறு சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

நாடுமுழுவதும் 173 கைதிகளுக்கு இன்றைய தினம் பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி , சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஏழு கைதிகள் விடுவிக்கப்பட்டனர் .