இலங்கை மனிதாபிமான நெருக்கடியின் நூற்றுக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணம்

246 0

இலங்கை மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ள தயாராகின்றனர் என ஏபிசி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைi மோசமடைந்துள்ளதால் 300க்கும் அதிகமான இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட தயாராகியுள்ளனர். புதியதொழில் கட்சி ; அரசாங்கம் காரணமாக படகில் உள்ளவர்கள் அவுஸ்திரேலியாவி;ற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்கடத்தல்காரர்கள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அனேகமான படகுகளை இலங்கை கடற்படையினர் இடைமறித்துள்ளனர் ஆனால் இரண்டு படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளன.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது,முடிவடையும் நிலையில் மருந்துகள் உணவுப்பொருட்கள் எரிபொருடகள் காணப்படுவதால் மேலும் பலர் அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பகின்றது .

புகலிடக்கோரிக்கையாளர்கள் நிறைந்த படகுகளை அலைமோதும் கடலில் இலங்கை கடற்படையினர் தடுத்துநிறுத்தும் காட்சிகள் ஏபிசிக்கு கிடைத்துள்ளன.

இந்த படகுகளில் இருந்த பலருடன் ஏபிசி கதை;துள்ளது புதியஅரசாங்கம் தங்களை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொழில்கட்சி புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளிற்கு ஒப்பான கொள்கைகளேயே பின்பற்றுகின்ற போதிலும் புதிய அரசாங்க மாற்றத்தை ஆட்கடத்தல்காரர்கள் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் கொள்கை உறுதியானது என அவுஸ்திரேலிய எல்லைக்காவல்படை ஏபிசிக்கு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகில் செல்பவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய எல்லை காவல்படை தெரிவித்துள்ளது.