அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் ரணில்

190 0

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளருடனான இந்த பேச்சுவார்த்தைகளின் போது சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் எடுத்துரைத்துள்ளார் .

இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட தயாராகவுள்ளது இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆர்வமாகவுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கான தனது வாழ்த்துக்களைதெரிவிக்கும்படி பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.