ஆதம்பாக்கத்தில் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

278 0

ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமா பந்தி சிறப்பு முகாம் தாசில்தார் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் வருவாய் கோட்ட அலுவலர் சாய் வர்த்தினி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

அப்போது ஆதம்பாக்கத்தில் உள்ள மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை பொதுப்பணி துறையினர் இடிக்கக்கூடாது. நாங்கள் ஏரி் இடத்தில் வீடு கட்டவில்லை் என்று கூறி வருவாய் கோட்ட அலுவலரிடம் மனு கொடுத்து அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பரங்கிமலை போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.