செஸ் ஒலிம்பியாட் லோகோவை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

199 0

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க 187 நாடுகளின் வீரர்கள் பதிவு செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், சென்னை, ரிப்பன் மாளிகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இலச்சினை மற்றும் சின்னத்தை ஒளிப்பட காட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான கவுண்ட்டவுனையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.