சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்

229 0

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்ற 15 இலங்கையர்களை கைதுசெய்துள்ள அதிகாரிகள் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

நீர்கொழும்பை சேர்ந்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட  ஆண்கள் 15 பேர் இன்று கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

19 நாட்களிற்கு முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்ட இவர்களை கிறிஸ்மஸ்;தீவிற்கு அருகில் படகொன்றில் வைத்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் இவர்களை தடுத்துவைத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இவர்களை அவுஸ்திரேலிய விமானப்படையின் ; விசேட விமானம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்,