இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவேண்டும் என மின்சார சபை தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
போட்டிகேள்விப்பத்திரமுறையில்லாமல் நாட்டின் சக்தி உற்பத்தி வளங்களை கையளிப்பது குழப்பங்களை ஏற்படுத்தும் என மின்சார சபை தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களிற்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றாவிட்டால் உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் மக்கள் சுமைகளை சுமக்கவேண்டிய நிலையில் உள்ளனர் அரசாங்க உறுப்பினர்கள் இந்த நிலையை அனுபவிக்கவில்லை,இதன் காரணமாக அவர்கள் நாட்டின் சூரிய காற்று வளங்களை அதானி குழுமத்திற்கு விற்பனை செய்ய முயல்கின்றனர் எனவும் மின்சார சபை தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் விநியோகஸ்தர்களிற்கு இந்த வாய்ப்புகளை வழங்கவேண்டும்,அரசாங்கம் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் வேதனம் தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</div>