பிரதமருக்கும் மத்திய வங்கி ஆளுநரிற்கும் இடையில் கறுத்துவேறுபாடா? மறுக்கின்றது மத்திய வங்கி |

203 0

பிரதமருக்கும் தனக்குமிடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக வெளியாகும் தகவல்களை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார்.

பிரதமருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அறிகின்றோம் என மத்திய வங்கி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறான கருத்துக்களை கடுமையாக நிராகரிப்பதோடு, இலங்கையின் பிரதமருக்கும் தனக்கும் இடையில் சுமூகமான உறவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின்பொருளாதாரத்தின் மீட்சிக்காக  பிரதமர் பாடுபடுகின்றார் என மத்திய வங்கி தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளது.