எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்!

164 0

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான சமூக ஊடக அறிக்கைகளை நிராகரித்த LITRO Gas Lanka Limited எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இதேவேளை, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் புதன்கிழமை வரை விநியோகிக்கப்பட மாட்டாது என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கையில் போதிய கையிருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிவாயு கொண்டு வரும் சரக்குக் கப்பல் விரைவில் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.