வரிகள் மூலம் சமூக வலைத்தள குரல்களை முடக்க முயற்சி – சஜித்

185 0

வரி அறவீடுகள் மூலம் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன் ஊடாக சமூக வலைத்தள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

போராட்டங்களின் குரலை முடக்கியதைப் போன்று சமூக வலைத்தளங்களின் குரல்களையும் முடக்கும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

தற்போது சில வைத்தியசாலைகளில் உணவு பொருட்களுக்கும் மருந்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதாக தெரிவித்து பொறுப்பேற்றவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.