யாழ். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உடலம் நல்லடக்கம்

298 0

கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பின் வடமராட்சிக்கிழக்குஒருங்கிணைப்பாளரான மேரி பற்றிமாவின் (புஷ்பராணி) உடலம் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு தாளையடி வடக்கை சேர்ந்த மேரி பற்றிமா புஸ்பராணி அருளானந்தம் கடந்த 2017 ம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் வலிந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பிலும்,தனது மகனை தேடியும் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வந்த நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அமரரது உடலம் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் இறுதி வணக்க வழிபாடுகள் இடம்பெற்று தாளையடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

யாழ். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உடலம் நல்லடக்கம் (PHOTOS)

அமரர் மேரி பற்றிமா புஸ்பராணிவின் ஒரு பிள்ளை சுனாமியிலும், ஒரு பிள்ளைகள் யுத்தத்திலும், ஒரு பிள்ளை காணாமல்போயும், ஒரு மகன் விபத்திலுமாக நான்கு பிள்ளைகள் இல்லாத நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 29/05/2022 அன்று சாவகச்சேரி மருத்துவமனையில் உயிரிழ்துள்ளார்.

யாழ். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உடலம் நல்லடக்கம் (PHOTOS)