தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

172 0

போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.சென்னை, வேளச்சேரியில் தலைநிமிரும் தமிழகம் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திமுக ஆட்சி அமைந்ததுமே தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது. இதை மக்கள் கண்கூடாக பார்த்தக்கொண்டிருக்கிறார்கள்.

38 மாவட்டங்களில் இருந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர்.  வெற்றிப்பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்ல இந்த போட்டியில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைநிமிரும் தமிழகம் என்ற சொற்களை ஓங்கி ஒலித்தமைக்காக நன்றிக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
பேச்சு, கவிதைக்கு தற்போது மரியாதை உயர்ந்துள்ளது. இந்த போட்டிகளை பார்த்தபோது, எனது கல்லூரி கால நினைவுக்கு சென்று விட்டேன்.

திராவிட மாடல் எதையும் இடிக்காது, உருவாக்கும். திராவிட மாடல் யாரையும் தாழ்த்தாது, சமமாக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.