போதைமாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

271 0

திருகோணமலை மாவட்டம் சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தானியகம பிரதேசத்தில் நேற்று இரவு 450 போதைமாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சர்தாபுர விஷேட அதிரடிப்படைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலை நகரில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றவிசாரணைப்பிரிவு அதிகாரியாவார்.

45 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் கொமுனுபுர, 5 ஆம் கட்டை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தனது வீட்டில் இருந்து தானியகம பிரதேசத்திற்கு போதை மாத்திரைகளை கொண்டுசெல்லும் வழியில் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைமாத்திரைகளுடன் கைதான பொலிஸ் உத்தியோகத்தரை இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர் .