ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தல் : நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

362 0

ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின்  9 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தபோது விசேட மூவரடங்கிய சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் இதற்கான உத்தரவை பிறப்பித்தனர்.