கண்டியில் நடைபெறவுள்ள போராட்டத்தை தடுக்கவே நாமல் கைது- திலும் அமுனுகம

533 0

NAAMALகண்டியில் நடைபெறவுள்ள போராட்டத்தை தடுக்கவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் தமது உத்தரவினை ஏற்றுக் கொள்ளாத நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 28ம் திகதி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கில் அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரைப் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

இந்த பாத யாத்திரை பிடிக்காத நபர்களின் முதல் இரையாக நாமல் ராஜபக்ச மாறியுள்ளார்.நிதி மோசடி விசாரணைப் பிரிவு கைது செய்ததன் பின்னர் வழக்கு விசாரணை செய்கின்றது.

நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முன்னதாக சிறைச்சாலை வாகனம் கொண்டு வரப்படுகின்றது.  அரசாங்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அரசாங்கத்திற்கு அடிபணிந்து ராஜபக்ச மீது குற்றம் சுமத்தாவிட்டால் சிறையில் அடைக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மெய்யான மக்களின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரே சக்தி கூட்டு எதிர்க்கட்சியாகும். அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களுக்கு எவ்வித குற்றச்சாட்டும் கிடையாது.  அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் தரப்பினருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.