சட்டவிரோத மீன்பிடி – 13 பேர் கைது

297 0

அகுரல கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காலி கடற்படை முகாம் அதிகாரிகள் மற்றும் கடற்பாதுகாப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் வசம் இருந்து ட்ரோலர் இயந்திரம், மீன்பிடி வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட ஒரு தொகை மீன்கள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட மீன்பிடி பரிசோதனை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.